2019 ஆம் ஆண்டிற்கான பாடசாலை பாடப் புத்தகங்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பாடப் புத்தக பிரசுர ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
414 வகை புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் மொத்தமாக அச்சிடப்பட்ட புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கை மூன்று கோடி 90 லட்சமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கென மேலதிக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திருமதி பத்மினி நாலிக்கா தெரிவித்துள்ளார்.