2019 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துடன் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் ஒன்றிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.