இலங்கையின் சிங்கள பிரபல இசையமைப்பாளரான இராஜ் வீரரத்னவின் புதிய படைப்பாக மற்றுமொரு புதிய பாடல் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
குறித்த காணொளியில் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வகையில் காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தேர்தலில் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதற்கமைய தேர்தல் முடிவுகளில் கோத்தபாய ராஜபக்ஷ 68.71% வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவாகிறார். தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க 20.01% வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருக்கமான இராஜ் தனது காணொளி ஊடாக மறைமுக சமிஞ்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் உள்ளார்ந்த அர்த்தங்களை கவனமாக கையாள வேண்டும் என அரசியல் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த காணொளி;