2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிடுவது மிகவும் பொருத்தமானது…

எதிர்வரும் 2020இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவரென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், அவராலேயே, நாட்டை முன்னேற்ற முடியுமென்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்குப் பொருத்தமான எவரையும் காண்பதற்கில்லையெனக் குறிப்பிட்ட மேர்வின் சில்வா, அக்கட்சிக்கான தலைவரொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, இன்னும் காலமுள்ளதென்றும் தற்போதைய சூழ்நிலையில், ரணில் அந்தத் தலைவர் பதவியை இழப்பாராயின், ஐ.தே.கவுக்கு பேரழிவு ஏற்படுமென்றும் மேலும் சுட்டிக்காட்டினார்.