2020 – ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் தெரிவிப்பு..

2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இந்நாட்டின் பிரபல முதல்தர வியாபாரிகளில் ஒருவரான ரொஹான் பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறவுக்கார சகோதரரான ரொஹான் பல்லேவத்த சிரச தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்நாடு எனக்கு முக்கியமானது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட மாட்டார் எனவும் நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார்.

 

E – (reeshma)