(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த யோசனைகளை தானும் தனது கட்சியும் முழுமையாக ஆதரிப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார். ” 21ஆவது திருத்தத்தில் உள்ள சகல திருத்தங்களையும் தாங்கள் முழுமனதோடு கேட்டுக்கொள்கின்றோம். அதேநேரம், எங்களது கட்சி சார்பான திருத்த யோசனைகளையும் நாங்கள் முன்வைக்கின்றோம்.
அதனையும் கவனத்தில் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ” இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தான் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.