(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 18 மாத காலப்பகுதியில் 23,745 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காலப்பகுதியில் 12,053 குற்றப் பத்திரிக்கைகள் நாட்டில் உள்ள மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.