(FASTNEWS|COLOMBO ) – நேற்று(19) காலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சோதனை நடவடிக்கை, கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 9524 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.