உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பிரகாரம், 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று(02) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், பெண்கள் ஊடக ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் பங்கேற்கவுள்ளனர்.