இந்திய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் விநோத நோய் காரணமாக எலும்பெல்லாம் சுருங்கி குழந்தையை போல் உள்ளார்.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமரி குந்தி (வயது 25). பிறக்கும்போது அனைவரையும் போல் இயல்பாக பிறந்த இவருக்கு 9ஆவது வயதில் இடது காலில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். எனினும் அவரது கால்கள் தொடர்ந்து பலவீனமடைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது அவரது கால் எலும்புகள் மட்டுமின்றி உடலில் உள்ள பெரும்பாலான எலும்புகள் சுருங்கியுள்ளன.
இதன் காரணமாக 4 அடி உயரம் இருந்த அவர் தற்போது 2 அடி உயரத்துக்கு சுருங்கிப்போனதுடன், படுத்த படுக்கையாகவே மாறிப்போனார்.
அவரது நிலை குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், குமரி விநோத எலும்பு அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Osteogenesis imperfecta என அழைக்கப்படும் இந்த நோய் காரணமாக அவரது எலும்புகள் சுருங்கியுள்ளன. இதனை முழுதும் குணப்படுத்த முடியாது என்றாலும் அவரது வலியை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.