மஹிந்தானந்த அலுக்கமகே இனது விளக்கமறியல் நீடிப்பு.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் மஹிந்தானந்தவின் விளக்கமறியல் எதிர்வரும் 27ம் திகதி வர நீடிக்கப்பட்டுள்ளது.

அலுக்கமகே இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிபதி குறித்த விளக்கமறியல் நீடிப்பினை விடுத்துள்ளார்.

கொழும்பு 07, கின்ஸி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை கிரிஸ்டோபர் ரொசான் என்ற பெயரில் ரூபா 27 மில்லியனுக்கு கொள்வனவு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த இந்த மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்த அலுத்கமகேவை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.