எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி, கொழும்பு பிரதான வீதி அஹுங்கல்ல சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அஹுங்கல்ல ராஜபக்ஷ மகா வித்தியாலயத்திற்கு ஆசிரியர்களை பெற்றுத்தருமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் இன்று(03) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ப்பாளர்கள் அஹுங்கல்ல சந்திக்கு வருகை தந்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.