தனக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக போராடி வரும் தமக்கு பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு சட்டவிரோத மண் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்.
எனினும் சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிரான போராட்டங்களை தாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை..” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்