நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பின்னடைவில்.. – ஜேவிபி.

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பின்னடைவையே எதிர்நோக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாற்றியுள்ளது.

கடந்த அராங்கத்தின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விரயங்களும், ஊழல்களும் நல்லாட்சி அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படுவதாக ஜேவிபி’யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.