பசில் மற்றும் நடேசன் ஆகியோருக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல்…

பசில் மற்றும் நடேசன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மல்வானை – கங்கபட வீதியில் அமைந்துள்ள 16 ஏக்கர் காணியுடனான வீடு தொடர்பிலான வழக்கின் அடிப்படையில் குறித்த இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணி அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்து கொள்வனவு செய்யப்பட்டதாக பசில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)