
புகையிரத எஞ்ஜின் சாரதிகள் மீளவும் வேலை நிறுத்தத்தில்..
நாளை(23) நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே எஞ்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே எஞ்ஜின் சாரதிகளை பணிக்கு உட்சேர்க்கப்படும் விதத்தில் தொடரும் முறைகேடுகள் குறித்து ஏலவே அறிவித்திருந்தும் தமக்கு வழங்கிய உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்தாது அசமந்தப் போக்குடன் இருக்கின்றமை குறித்த கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்தே குறித்த சங்கம் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.