4 மாணவர்களுடன், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மாணவி: அனைவரும் கைது

கண்டி , மகாவலி கங்கையின் , கலிகமுவ ஆற்றுப்பகுதியில் நீராட வந்த பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் பிரதேசவாசிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொது இட த்தில் தரக்குறைவான முறையில் நடந்துகொண்டதாலேயே அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் 4 பேர் மற்றும் மாணவியொருவருமே பேராதெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் குறித்த இட த்திற்கு வந்தோர், போதையில் கூச்சலிட்டு ஆட்டம் போட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் குறித்த பெண்ணை அவர் அனுமதியுடன் அம்மாணவர்கள் நிர்வாணமாக படமெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.