40 ஆவது தேசிய இளைஞர் விருது விழா நாளை(28)…

40 ஆவது தேசிய இளைஞர் விருது வழங்கும் விழா நாளை(28) மாலை தாமரை தடாகம் அரங்கில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். இளைஞர், யுவதிகளின் கலைத்திறனை தேசிய மட்டத்தில் அறிமுகம் செய்து அவர்களை கௌரவிப்பது இதன்நோக்கமாகும். 160 கலைஞர்கள் நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.