அமைச்சர்களின் எண்ணிக்கை 43 ஆக வரையறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வுகள் இன்று(01) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரும், பிரதமரின் செயலாளரும் இணைந்து அமைச்சரவை மாற்றம் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கை 43 ஆக வரையறுக்கப்பட உள்ளது.
####