கொலை அச்சுறுத்தல் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகத் தயார்.. – ரவி..

கொலை அச்சுறுத்தல் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகத் தயார்.. – ரவி..

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் சாட்சி வழங்கிய பெந்தௌஸ் குடியிருப்பின் தலைவர் அனிகா விஜேசூரியவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய(07) பராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இன்னும், குறித்த கொலை அச்சுறுத்தலுடன் தனக்கு தொடர்புண்டு என நிரூபிக்கப்பட்டால் தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்தது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யத் தயார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

E – (reeshma)