நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் சேவையின் ஒரு கட்டமாக 47 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டு ள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
நேற்று(23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறினார். தேசிய ஒளடத கொள்கைக்கு அமைவாக இந்த விலை குறைப்பு அமைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது, இருதய நோய், உள்ளிட்ட முக்கிய நோய்களுக்காக பயன்படுத்தப்படும் 47 வகையான மாத்திரைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.