5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகரான அறையில் பிள்ளையான்

சமீபத்தில் கைதான பிள்ளையான், 5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகரான அறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதி நிதிதிகளைவெளிநாட்டில் வைத்து மங்கள சமரவீர சந்தித்துவிட்டார். இலங்கை அரசு அந்த புலம்பெயர் அமைப்புகளின் தடையை தற்போது த நீக்க முற்பபட்டுள்ளது  அத்தோடு கருணா , பிள்ளையான் மற்றும் கே.பி போன்ற நபர்கள் மீது ஏதோ இலங்கை அரசின் சட்டம் பாயவுள்ளது என்பது போல ஒரு நாடகமாடி.

அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை முதலில் எடுப்பது. அதன் ஒரு அங்கமாக பிள்ளையான பிடித்து கைதுசெய்து அவரை சிறையில் அடைப்பது போல இலங்கை அரசு காட்டி வருகிறது.

மிகவும் அவதானமாக , மற்றும் நுண்ணிப்பாக காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. பிள்ளையானை இலங்கை அரசு பிடித்து சிறையில் அடைத்துள்ளது என்ற செய்தி தான் இதுவரை தமிழ் மக்களுக்கு கசிந்துள்ளது.

ஆனால் சிறைச்சாலையில் உள்ள அதி முக்கிய வி.ஐ.பிக்கள் தங்கும் அறையில் தான் பிள்ளையான் வைக்கப்பட்டு இருக்கிறான். தேவைக்கு அதிகமாக சகல வசதிகளும் அவனுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த மைத்திரி மற்றும் ரணிலை நம்பியே சில புலம்பெயர் அமைப்புகள் தற்போது பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
சில இணையதளத்தில் வெளியானன செய்திகளின் சுருக்கம்