5000 ரூபா நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் கைது…

சட்டவிரோதமாக இலங்கை நாணயத்தாள்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவரை நேற்று(06) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் பயணப்பையில் இருந்து 255 ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த பெறுமதி 12,75,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.