டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்…

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இரு ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெயிட்ஸ் பகுதியில் இருந்து டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியாவில் போர் நிலவரங்களை கண்காணித்துவரும் முகமை தெரிவித்துள்ளது.

சிரியா அரசுக்கு ஆதரவான படைகளின் ஆயுத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புக்கள் ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.