56,000 இற்கும் மேற்பட்டோர் வறட்சியினால் பாதிப்பு…

(FASTNEWS|COLOMBO) தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15 829 குடும்பங்களைச் சேர்ந்த 56 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு7 795 குடுபங்களைச் சேர்ந்த 27 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 7 350 குடுபங்களைச் சேர்ந்த 25 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.