58 லட்சம் பெறுமதியான மிதென்பிடமின் எனப்படும் ஒருவகை போதைப்பொருளுடன் இன்று(01) அதிகாலை 22 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து வருகை தந்த விமானம் ஒன்றிலேயே குறித்த நபர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 454 கிராம் மிதென்பிடமின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.