5Km சுற்று வட்டாரத்தில் பட்டம் பறக்க விடுவது தண்டனைக்குரிய குற்றம்…

விமான பயணத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் இடயூறு விளைவிக்கும் வகையில் பட்டம் பறக்க விடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு விமான சேவை அதிகார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

விமான நிலையத்தை அண்டிய 5Km சுற்று வட்டாரத்தில் பட்டம் பறக்க விடுவதை தவிர்க்க வேண்டுமென விமான சேவை அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தை அண்டிய பகுதியில் பட்டம் விடுவது தண்டனைக்குரிய குற்றமென விமான சேவை அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.