
எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழப்பு…
கடந்த 3 வாரங்களுக்குள் பொலன்னறுவை பகுதியில், எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், எலிக்காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை சுகாதார சேவை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.