மிளகு இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம்…

மிளகு இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம்…

மிளகு இறக்குமதி நடவடிக்கைகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், மிளகு இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, உழுந்து செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் உழுந்து ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபா வரியை அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.