கடந்த வருடத்தை விட கூடு­தலான பேரீத்­தங்களை வழங்க சவுதி இணக்கம்…

கடந்த வருடத்தை விட கூடு­தலான பேரீத்­தங்களை வழங்க சவுதி இணக்கம்…

நோன்பு காலத்திற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீத்தம் பழங்களை, கடந்த வருடத்தை விட கூடு­தலான அளவு வழங்குவ­தற்கு இலங்கைக்­கான சவுதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி இணக்கம் தெரிவித்­துள்ளார்.

சவூதி அரே­பியா நாட்டின் பேரீத்­தம்­பழ அறு­வடைக் காலம் நோன்­புக்கு பிந்­திய நிலையில் இடம்­பெ­று­வதால் பேரித்­தம்­பழம் வழங்கும் நட­வ­டிக்­கைகள் சற்றுத் தாமதம் ஏற்­படலாம்.

எனினும் அதனை துரி­த­மாக பெற்றுத் தரு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ள­வுள்­ள­தாகவும் சவூதி தூதுவர் உறு­தி­ய­ளித்­துள்ளார் என முஸ்­லிம சமய விவ­காரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்­தி­யுடன் இடம்பெற்ற சந்­திப்பின் பின்னர், அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இதனை தெரி­வித்துள்ளார்.