இலங்கையில் இயங்கிவருவதாகக் கூறப்படும் மிகப் பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபரும் , மலேசியாவை வசிப்பிடமாகக் கொண்டவருமான மொஹமட் முபாரக் மொஹமட் முஜஹிடீன் என்பவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது
அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2009 முதல் 2014 ஜூலை 7 ஆம் திகதி வரை இவர் போதைப் பொருள் அடங்கிய சுமார் 7 கொள்கலன்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அக் கொள்கலன்களுக்குள் இருந்து சுமார் 750 கிலோவுக்கும் அதிகம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்படா எல்லாரையும் பிடிபாங்க