பங்களாதேஷ் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான Dash Q-400 எனும் விமானமொன்று, 67 பயணிகள் மற்றும் 04 விமான அலுவலர்களுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று(12) காலை பங்களாதேஷின் டாகா நகரில் இருந்து நேபாளம் நோக்கி பயணித்த குறித்த விமானம் நேபாளம், திருபவன் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ள 14 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
rishma