துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலம் மீட்பு…

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலம் மீட்பு…

(FASTNEWS|COLOMBO) நவகமுவ, கொடெல்லவத்த பகுதியில் இன்று(11) காலை துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக  பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

35 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நவகமுவ பொலிசார் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலத்தின் அருகில் இருந்து டி-56 ரக துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் தோட்டாக்ளும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.