பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது

பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது

கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி என இனங்காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர் மன்னார் – கோவில்குளம் பகுதியில் வைத்து குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

(riz)