7 மாகாணங்களுக்கு தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை..

நாட்டின் தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மத்திய, சப்ரகமுவ, மேல், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.