700 மில்லியன் ரூபா மோசடியில் எயார்டெல் நிறுவனம்

எயார்டெல் நிறுவனம் 700 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம், இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு இவ்வாறு 700 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோசடியானது, தொலைதொடர்பு கருவிகளை இறக்குமதி செய்த போது இவ்வாறு பாரியளவில் சுங்கக் கட்டணங்களை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமையானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் நிலமையை ஏற்படுத்தக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.