மரக்கறி கொள்வனவு – வர்த்தகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

மரக்கறி கொள்வனவு – வர்த்தகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

(FASTNEWS|COLOMBO) மரக்கறி கொள்வனவு செய்வதற்கு வருகைதரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனைய நாட்களில் 800 முதல் 1000 லொறிகள் மத்திய நிலையத்திற்கு வருகை தருவதுடன், தற்போது 200 க்கும் குறைவான வர்த்தக லொறிகளே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தருவதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.