
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
(FASTNEWS|COLOMBO) சீகிரியவை பார்வையிடவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீகிரிய மேலதிக பணிப்பாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்தார்.
பொசொன் பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாளொன்றிற்கு சுமார் 800க்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், 100க்கும், 150க்கும் இடைப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.