கொழும்பு – டெல்லிக்கு இடையில் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

கொழும்பு – டெல்லிக்கு இடையில் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எயார் இந்தியா விமான சேவை தீர்மானித்துள்ளது.

இந்தியன் சிவில் விமான சேவை அமைச்சர் ஹர்திப் சிங்பூரி நேற்று இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை அடுத்து இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேற்கொள்ளும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.