
ரயில் பணிப்புறக்கணிப்பு – இ.போ.சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்
(FASTNEWS|COLOMBO)- ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை 79 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றிருப்பதாக சபையின் பொது முகாமையாளர் டி.ஏச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக கடந்த 21ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையில் மேலதிக பேரூந்து சேவைகள் மூலம் குறித்த இந்த வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.