
கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கு அங்கேரிய அரசு உடன்பாடு
(FASTNEWS| COLOMBO) – பொதுமக்களுக்கு மிகவும் துரிதமாகவும் பாதுகாப்பானதுமான போக்குவரத்து வசதிகளை செய்யும் நோக்கில் கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் நிர்மாணப் பணிகளுக்காக தேவையான நிதி நிவாரணத்தை வழங்குவதற்கும் அங்கேரிய அரசாங்கம் உடன்பட்டுள்ளது.
இதற்கமைவாக குறித்த திட்டத்திற்கு தேவையான 52 மில்லியன் யுரோக்கள் நிவாரணக் கடன் தொகையை அங்கேரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் பெற்றுக் கொள்வதற்காக இந்த வங்கியுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.