வெல்கம களத்தில்.. ஸ்ரீ.சு.கட்சியின் தலைமையகத்தில்.. பொதுச்செயலாளர்கள் கட்டியணைப்பு

(FASTGOSSIP| COLOMBO) – இந்நாட்களில் விவாதத்திற்குரிய பேசு பொருளாக உள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு நேற்று(26) சென்றுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வுக்கே அவர் இவ்வாறு கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது தயாசிறி ஜயசேகர மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் குமார வெல்கமவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு சுமுகமாக கலந்துரையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.