(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த நிலையில், அதற்கான வைபவ நிகழ்வுகள் தொடர்பிலான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அவசர அவசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உத்தரவுக்கு அமைய அண்மையில் கடற்படை இராணுவத் தளபதியினால் யோஷித மீளவும் கடற்படையின் லுதினன் பதவிக்கு உள்வாங்கப்பட்டார். அது அவ்வாறு இருக்க கடற்படையில் திரும்பவும் இணைந்து சூழ்ச்சியில் யோஷிதவுக்கு விழுவதற்கு விருப்பம் இல்லாத போதிலும் தனது திருமண நிகழ்வில் கடற்படை உடையில் அலங்கரிக்க யோஷிதவுக்கும் தந்தை மஹிந்தவுக்கும் ஆசை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தமை இன்று புலனாவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
