(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
தேர்தலில் தமது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் காலத்தில் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் நடைபெறுவதாக தெரிவித்தார்.