
உலர்ந்த பழங்களது இறக்குமதிக்கும் கேள்விக்குறி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலர்ந்த பழங்கள் உட்பட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
உள்நாட்டு விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.