காலியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

காலியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –காலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதயில் விநியோக செயற்பாடு  உரிய முறையில் இடம்பெறாமையே, இதற்கு பிரதான காரணமெனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பருப்பு மற்றும் டின் மீன் என்பவற்றுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.