9 வயது சிறுவன் தற்கொலை

ஹோரன – அகுருவாதோட பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பாணதுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அகுருவாதோட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.