ருவாண்டாவில் முதல் கொரோனா மரணம்

ருவாண்டாவில் முதல் கொரோனா மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

65 வயதான அந்த நபர் அண்டை நாட்டில் இருந்து ருவாண்டா வந்ததாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.