வனிதாவுக்கு கொலை மிரட்டல் – சூர்யா தேவி கைது

வனிதாவுக்கு கொலை மிரட்டல் – சூர்யா தேவி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அந்தவகையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து வனிதாவின் திருமணத்தைப் பற்றியும், வனிதாவை பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.

வனிதாவும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து நடிகை வனிதா, சூர்யா தேவி மீது பொலிஸில் முறைப்பாடு ஒன்றை அளித்தார். தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

இதேபோல் வனிதா மீது, சூர்யா தேவியும் முறைப்பாடு அளித்திருந்தார். இதுதொடர்பான புகார்கள் அனைத்தையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிஸார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் பொலிஸார் அழைத்து விசாரித்தனர். இதுபோன்று அவதூறு செய்து வீடியோக்கள் வெளியிடக்கூடாது என இருவரையும் பொலிஸார் எச்சரித்தனர்.

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.