அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மீண்டும் பரவி வரும் கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  இன்று உறுதிப்படுத்தியிருந்தார்.